அதிகாரம்: அல்-ஃபாத்திஹா1
அருளப் பெற்ற இடம் : மக்கா
வசனங்கள் : 7 (பிஸ்மில்லாஹ் உட்பட2)
வசனங்கள் : 7 (பிஸ்மில்லாஹ் உட்பட2)
அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
எல்லா உலகங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது.3
அவன்) அளவற்ற அருளாளன்; மேன்மேலும் கருணை காட்டுபவன்.
(அவன்) நற்கூலி, தண்டனை (வழங்கும்) காலத்தின் அதிபதி ஆவான்.4
(இறைவா!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம். மேலும் உன்னிடமே உதவி கேட்கிறோம்.5
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!6
உன் கோபத்திற்கு ஆளானவர்கள், வழிதவறியவர்கள்7 ஆகியோரின் வழியில் அல்லாமல் நீ அருள் புரிந்தவர்களின் வழியில்8 (நீ எங்களை நடத்துவாயாக!). ரு1