79- அல்-நாஸியாத்

அதிகாரம் அல்-நாஸியாத்
அருளப் பெற்ற இடம்: மக்கா |வசனங்கள்: 47

பிரிவுகள்: 2


  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (மக்களை உண்மையான நம்பிக்கையின் பால்) சுறுசுறுப்பாக ஈர்ப்பவர்கள் மேல் ஆணையாக.  (அதாவது அவர்களை சான்றாகக் காட்டுகிறேன்).
  3. மேலும் (தங்கள்) முடிச்சுகளை உறுதியாகக் கட்டுபவர்கள் மேல் ஆணையாக.
  4. வேகமாக ஊர்ந்து செல்பவர்கள் மேல் ஆணையாக.
  5. பின்னர் அவர்கள் மிக அதிகமாக (முன்னேற்றம் பெற்று) மற்றவர்களை முந்துகின்றனர்.
  6. பின்னர் அவர்கள் (தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட) விவகாரங்களை நிருவகிக்கின்றனர்.
  7. நடுங்கக்கூடிய (பூமியான)து நடுங்கும் நாளில் (அது நேரிடும்).
  8. இரண்டாவது (நடுக்கம்) ஒன்று அதனைப் பின்பற்றும்.
  9. அந்நாளில் (சிலருடைய) உள்ளங்கள் நடுங்கிக் கொண்டிருக்கும்.
  10. அவர்களின் கண்கள் கீழ் நோக்கியவாறு இருக்கும்.
  11. அவர்கள் கூறுவர் (உண்மையிலேயே) நாங்கள் எங்களுடைய பழைய நிலைக்கு கொண்டு வரப்படுவோம்.
  12. என்ன? நாங்கள் அழுகிப்போன எலும்புகளாக ஆகிவிட்டாலுமா?
  13. அவ்வாறாயின், நிச்சயமாக அது ஒரு பெரும் இழப்பிற்குரிய திரும்புதலேயாகும் என்று அவர்கள் கூறினார்கள்.
  14. அது ஒரே ஓர் அதட்டல் தான்.
  15. எனவே அவர்கள் (எல்லாரும் போர்க்) களத்திற்கு வருவார்கள்.
  16. முஸாவின் செய்தி உமக்கு கிடைத்ததா?
  17. புனிதப் பள்ளத்தாக்காகிய துவாவில் அவரது இறைவன் அவரை அழைத்துக் கூறிய போது;
  18. (அதாவது) நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக:  ஏனென்றால், அவன் வரம்பு மீறிவிட்டான்.
  19. நீர் (அவனிடம்) கூறுவீராக: நீ தூய்மையடைய விரும்புகின்றாயா?
  20. நீ (இறைவனுக்கு) அஞ்சி நடப்பதற்காக நான் உனக்கு உன் இறைவன்பால் வழி காட்டுவேன்.
  21. எனவே, அவர் அவனுக்கு ஒரு பெரும் அடையாளத்தைக் காட்டினார்.
  22. ஆனால். அவன் (அதனைப்) பொய்ப்படுத்தி, மாறு செய்தான்.
  23. பின்னர் அவன் (முஸாவுக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சி செய்பவனால் (அவரைப்) புறக்கணித்து விட்டான்.
  24. மேலும் அவன் (அவையினரை) ஒன்று திரட்டி (பொதுமக்களுக்கு) அறிவிப்பு கொடுத்தான்.
  25. நான் உங்களுடைய மேலான இறைவனாவேன் என்று அவன் கூறினான்.
  26. எனவே அல்லாஹ் அவனை மறுஉலக, மற்றும் இவ்வுலகத் தண்டனைக்காகப் பிடித்து விட்டான்.
  27. நிச்சயமாக இதில், (தமது இறைவனுக்கு) அஞ்சுபவருக்கு ஒரு படிப்பினை உள்ளது. ரு1
  28. படைப்பதற்கு மிகக் கடினமானது நீங்களா? அல்லது அவன் படைத்துள்ள வானமா?
  29. அவன் அதன் உயரத்தை உயர்த்தி, அதனை முழுமைப்படுத்தினான்.
  30. அவன் அதன் இரவை இருளாக்கி, அதன் முற்பகல் நேரத்தை (ஒளிமயமாக்கி) வெளிப்படுத்தினான்.
  31. அத்துடன் பூமியை அவன் விரிவுபடுத்தினான்.
  32. அவன் அதிலிருந்து அதன் நீரையும், அதன் புல்வெளியையும் வெளிப்படுத்தினான்.
  33. மலைகளை அவன் உறுதியானதாக ஆக்கினான்.
  34. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதாகும்.
  35. ஆனால் மாபெரும் பேராபத்து வரும்போது,
  36. மனிதன் எதற்காகப் பெரும் முயற்சி செய்தானோ அதை(யெல்லாம்) அவன் அந்நாளில் நினைத்துப் பார்ப்பான்.
  37. பார்ப்பவனுக்கு நரகம் தெளிவாக வெளிப்படுத்தப்படும்.
  38. எனவே எவன் வரம்பு மீறி.
  39. இவ்வுலக வாழ்கைக்கு முதன்மையளிக்கின்றானோ,
  40. நிச்சயமாக நரக நெருப்பே (அவனது) தங்குமிடமாகும்.
  41. ஆனால். எவன் தனது இறைவனின் மகிமைக்கு அஞ்சி, தீய விருப்பங்களை விட்டுத் தன்னைத் தடுத்துக் கொண்டானோ,
  42. நிச்சயமாக சொர்க்கமே (அவனுடைய) தங்குமிடமாகும்.
  43. அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைப் பற்றி, அது எப்பொழுது வரும் என்று கேட்கின்றனர்.
  44. அத(ன் வருகையி)னைப் பற்றிய பேச்சுடன் உமக்கு என்ன தொடர்பு இருக்கிறது?
  45. அதன் இறுதி(யான அறிவு) உமது இறைவனிடமுள்ளது.
  46. நிச்சயமாக நீர் அதற்கு அஞ்சபவரை எச்சரிக்கக் கூடியவரேயாவீர்.
  47. அவர்கள் அதனைக் காணும் நாளில், அவர்(இவ்வுலகில்) ஒரு மாலை நேரம் அல்லது அதன் காலை நேரம் மட்டுமேயன்றி தங்கியிருந்ததில்லை போன்று (அவர்கள் நிலை) இருக்கும். ரு2

Powered by Blogger.