அதிகாரம்: அபஸ
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்: 43

பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. அவர் முகம் சுளித்து புறக்கணித்து விட்டார்.
  3. அவரிடத்தில் ஒரு குருடர் வந்ததே, அதற்குக் காரணம்.
  4. அவன் கட்டாயம் தூயவனாக ஆகி விடக் கூடும்.
  5. அல்லது (படிப்பினைக்குரியவற்றை) அவன் நினைத்துப் பார்ப்பான்; அவ்வாறு நினைத்துப் பார்ப்பது அவனுக்குப் பயனளிக்கும் என்று உம்மை அறியச் செய்வது எது?   
  6. எவன் (உண்மையை) அலட்சியம் செய்கின்றானோ, 
  7. அவன் பால் நீர் நன்கு கவனம் செலுத்துகிறீர் (என்றிருக்க முடியுமா?)
  8. அவன் தூய்மையடையவில்லையென்றால் அதற்கு நீர் பொறுப்பல்ல. (என்றிருக்கும் போது, உம்மால் அவ்வாறு எப்படிச் செய்ய முடியும்?)
  9. ஆனால் எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ,
  10. மேலும் எவர் (இறைவனுக்கும்)அஞ்சுகிறாரோ,
  11. அவரை நீர் கவனிக்கவில்லையாம்.ஒரு போதும் அவ்வாறன்று. (இக்குற்றச் சாட்டுகளெல்லாம் தவறானவையாகும்.) 
  12. நிச்சயமாக (குர்ஆனாகிய)இது ஓர் அறிவுரையாகும்.
  13. எனவே எவர் விரும்புவாரோ அவர் இதனை நினைவில் கொள்ளட்டும்.
  14. (இந்தக் குர்ஆன்) கண்ணியதிற்கு(ம்)ரிய (நூல்களில் உள்ளது),
  15. மேன்மைக்கும் தூய்மைக்கும் உரிய நூல்களில் உள்ளது.         
  16. (எழுதுபவர் மற்றும் நெடுந்தொலைப்)பயணிகளில் கைகளில் உள்ளது. 
  17. அது கண்ணிய மிகு, நன்மைமிக்கவர்களின் (கைகளில் உள்ளது)
  18. மனிதனுக்கு அழிவே! அவன் எந்த அளவிற்கு நன்றி கொன்றவனாக இருக்கின்றான்!
  19. அவன் (அதாவது இறைவன்) எந்தப் பொருளில் இருந்து அவனைப் படைக்கின்றான்?    
  20. ஒரு விந்துத் துளியிலிருந்து! அவன் அவனை படைக்கின்றான். அவனு(டைய முன்னேற்றத்து)க்கு ஒரு மதிப்பீட்டை ஏற்படுத்துகின்றான்.
  21. பின்னர் அவன் அவனுக்கு வழியை எளிதாக ஆக்குகின்றான்
  22. பின்னர் அவன் அவனை மரணமடையச் செய்து, அவனை ஒரு கபரில் அடக்குகிறான்.
  23. பின்னர் அவன் விரும்பும் போது அவனை மீண்டும் எழுப்புவான்.
  24. ஒரு போதும் அவ்வாறன்று (அதாவது மறுமை வாழ்வு இல்லை என்று நீங்கள் நினைப்பது தவறு) அவனுக்கு (மனிதனுக்கு) இட்ட கட்டளையை இதுவரை அவன் நிறைவேற்றவில்லை.
  25. எனவே, மனிதன் தனது உணவை பார்க்க வேண்டும்.
  26. நாம் தண்ணீரை மிக அதிகமாக பொழிய செய்கின்றோம்.
  27. பின்னர் நாம் பூமியை ஏற்ற முறையில் நன்றாக பிளக்கின்றோம்
  28. பின்னர் நாம் அதில் தானியம் முளையச் செய்கின்றோம்.
  29. திராட்சைப் பழங்களையும் காய்கறி வகைகளையும்;
  30. ஆலிவ் மரத்தையும், பேரிச்ச மரத்தையும்;
  31. (அதனுடன்) அடர்ந்த காடுகளையும்,
  32. பழங்களையும், புற்பூண்டுகளையும் (முளையச் செய்கின்றோம்).
  33. (இவையெல்லாம்) உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பவையாகும்.
  34. ஆனால் காதை செவிடாக்கும் பேரொலி  வரும் போது,
  35. மனிதன் தன் சகோதரனை விட்டும், 
  36. தன் தாய், தன் தந்தையை (விட்டும்),
  37. தன் மனைவி, தன் ஆண் மக்கள் ஆகியவர்களை விட்டும் விரைவாக ஓடும் நாளில்.
  38. அந் நாளில் அவர்களுள் ஒவ்வொருவருக்கும் (மற்றவரைப் பற்றி) அக்கரையற்றவனாய் இருக்குமளவுக்கு (தன்னைப்பற்றிய) கவலையிருக்கும்.
  39. அந்நாளில் சில (ரது) முகங்கள் ஒளி மயமானவையாகும்.
  40. சிரித்தவாறும், மகிழ்ச்சியடைந்த வாறும் இருக்கும்.
  41. மேலும் அந்நாளில் சில(ரது) முகங்களில் தூசு படிந்திருக்கும்.
  42. அவற்றை இருள் மூடிக்கொண்டிருக்கும்.
  43. இவர்களே நிராகரிப்பவர்களும் தீயவர்களுமாவார்கள். ரு1
Powered by Blogger.