55- அர் ரஹ்மான்

அதிகாரம்: அர் ரஹ்மான்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்:79

பிரிவுகள்: 3


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன். 
  3. அவன் குர்ஆனைப் கற்றுக் கொடுத்தான். 
  4. அவன் மனிதனைப் படைத்தான். 
  5. அவன் அவனுக்குத் தெளிவுரையைக் கற்றுக் கொடுத்தான். 
  6. சூரியனும், சந்திரனும் குறிப்பிட்ட ஒரு கணக்கின் படி (இயங்கிக் கொண்டு) இருக்கின்றன. 
  7. செடிகளும், மரங்களும் (அவனது விருப்பத்திற்கு அடக்கத்துடன்) கீழ்ப்படிகின்றன. 
  8. அவன் வானத்தை உயர்த்தி, நிறுவையை ஏற்படுத்தினான். 
  9. அளவில் நீங்கள் வரம்பு மீறாதிருப்பதற்காக (அவ்வாறு செய்தான்). 
  10. எனவே நீங்கள் (எல்லாவற்றையும்) நேர்மையுடன் நிறுத்துக் கொடுங்கள். அளவைக் குறைக்காதீர்கள்.
  11. மேலும் அவன் பூமியை(த் தனது) படைப்புகளுக்காக அமைத்தான். 
  12. அதில் (எல்லா வகைப்) பழமும், உறைகளுடனுள்ள பேரீச்ச மரங்களும் உள்ளன. 
  13. மேல் தோலுடைய தானியங்களும், நறுமணமுள்ள செடிகளும் உள்ளன. 
  14. எனவே (ஜின்களும், மனிதர்களுமாகிய) நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  15. அவன் மனிதனைச் சுட்ட மட்பாண்டம் போன்ற ஒலி எழுப்பும் காய்ந்த களிமண்ணிலிருந்து படைத்தான். 
  16. அவன் ஜின்னைத் தீச்சுடரிலிருந்து படைத்தான்1. 
  17. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  18. அவன் இரண்டு கிழக்குகளுக்கும் இறைவன்; இரண்டு மேற்குகளுக்கும் இறைவன்2. 
  19. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  20. அவன் இரண்டு கடல்களை மிக நெருக்கமாகப் படைத்துள்ளான். அவை (ஒரு நாள்) இணைந்து விடும்3.
  21. (தற்போது) அவ்விரண்டிற்குமிடையில் தடுப்பு ஒன்று உள்ளது. இதனால் அவை வரம்பு மீறி, ஒன்றிற்குள் ஒன்று நுழைவதில்லை. 
  22. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  23. அவற்றிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வெளிப்படுகின்றன. 
  24. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருள்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  25. மேலும் அவனுக்கு கடலில் செல்லும் மலைகள் போன்ற உயரமான கப்பல்கள் இருக்கின்றன4. 
  26. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? ரு1 
  27. (பூமியாகிய) இதன் மீது உள்ளவையெல்லாம் அழியக்கூடியவையே;  
  28. புகழுக்கும், கண்ணியத்திற்குமுரிய உம் இறைவனின் அருள் நிலைத்திருக்கும். 
  29. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  30. வானங்களிலும், பூமியிலுமுள்ளவர்கள் அவனிடமே(தங்கள் தேவைகளைக் ) கேட்கின்றனர். ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அவன் தன்னை வெவ்வேறான தோற்றத்தில் வெளிப்படுத்துகின்றான்5.
  31. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  32. இருபெரும் சக்திகளே!6 விரைவில் நாம் உங்களிடம் வரவிருக்கின்றோம்7. 
  33. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?8 
  34. ஜின்கள், மனிதர் கூட்டத்தினரே!9 வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை விட்டும் வெளியேறிச் செல்ல, உங்களுக்கு வலிமையிருந்தால் செல்லுங்கள்10. ஆனால் சான்று வலிமையினாலன்றி உங்களால் செல்ல இயலாது. 
  35. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  36. புகையில்லாத தீச்சுடரும்11, தெளிவான தீச்சுவாலையும்12 உங்களுக்கெதிராக அனுப்பப்படும். எனவே உங்களாலே, உங்களுக்கு (ஒருவர், மற்றவருக்கு) ஒருபோதும் உதவி செய்ய இயலாது. 
  37. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  38. வானம் பிளந்து, சிவப்புத் தோலைப் போன்று சிவப்பாக ஆகும் போது.(அது இறுதி முடிவின் காலமாகும்). 
  39. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  40. அந்நாளில் மனிதனிடமோ, ஜின்னிடமோ அவனது பாவம் பற்றிக் கேட்கப்பட மாட்டாது13.
  41. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  42. குற்றவாளிகள், அவர்களுக்குரிய அடையாளங்களால் அறிந்து கொள்ளப்பட்டு, முன் உச்சி முடிகளாலும், பாதங்களாலும் பிடிக்கப்படுவார்கள். 
  43. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  44. குற்றவாளிகள் மறுத்து வந்த நரகம் இதுவே. 
  45. அதற்கும் மிக அதிகமாகக் கொதிக்கும் நீருக்கு  இடையே அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்14. 
  46. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? ரு2 
  47. ஆனால் தமது இறைவனின் உன்னத தோற்றத்திற்கு அஞ்சி நிற்போருக்கு (இவ்வுலகிலும், மறுஉலகிலும்) இரு தோட்டங்கள் உள்ளன. 
  48. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  49. (இரு தோட்டங்களும்) கிளைகள் பரவியதாக இருக்கும். 
  50. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
  51. அவ்விரண்டிலும் தாராளமாக ஓடிக் கொண்டிருக்கும் இரு நீரூற்றுக்கள் உள்ளன. 
  52. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  53. அவ்விரண்டிலும் ஒவ்வொரு (வகைப்) பழமும் இரட்டையாக இருக்கும். 
  54. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  55. அவர்கள் விரிப்புகளின் மேல் (மஞ்சங்களில்) சாய்ந்தவர்களாக அமர்ந்திருப்பார்கள். அவற்றின் உள் அமைப்புகள் தடித்த பட்டுத் துணியால் ஆனது. அவ்விரு தோட்டங்களிலுள்ள கனிந்த பழங்கள் அருகில் இருக்கும். 
  56. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  57. அவற்றில் அடக்கமான பார்வையுடைய (தூய) பெண்கள்15 இருப்பார்கள். அவர்களை மனிதரோ, ஜின்னோ இவர்களுக்கு முன் தொட்டிருக்க மாட்டார்கள். 
  58. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  59. அவர்கள் மாணிக்கங்களையும், சிறிய முத்துக்களையும் போன்றவர்கள். 
  60. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
  61. நன்மைக்கு ஈடு நன்மையேயன்றி வேறுண்டா? 
  62. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  63. அவ்விரண்டுமன்றி இன்னும் (வேறு) இரு தோட்டங்கள் உள்ளன. 
  64. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  65. (இவ்விரு தோட்டங்களும்) மிக்க பசுமையானவையாகும். 
  66. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  67. இவ்விரண்டிலும் நன்றாகப் பீறிட்டு வரும் இரு நீரூற்றுக்கள் உள்ளன. 
  68. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  69. இவ்விரண்டிலும் (எல்லா வகைப்) பழங்களும், பேரீச்சைகளும், மாதுளைகளும் உள்ளன. 
  70. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்?
  71. அத் தோட்டங்களில் நல்லவர்களும், அழகானவர்களும் (ஆகிய பெண்கள்) உள்ளனர். 
  72. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  73. அவர்கள் கூடாரங்களில், நன்கு பாதுகாக்கப்பட்ட, கருமை நிறக் கண்களைக் கொண்ட அழகிய பெண்களாவர். 
  74. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  75. இவர்களுக்கு முன்னர் மனிதரோ, ஜின்னோ எவரும் அவர்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். 
  76. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  77. அவர்கள் பச்சை நிற மெத்தைகளிலும், அழகிய விரிப்புகளிலும் சாய்ந்தவர்களாக அமர்ந்திருப்பர். 
  78. எனவே நீங்கள் இருவரும் உங்கள் இறைவனது அருட்களுள் எதனையெல்லாம் மறுப்பீர்கள்? 
  79. புகழுக்கும், கண்ணியத்திற்குமுரிய உம் இறைவனின் பெயர் மிக்க அருளுக்குரியதாகும். ரு3

Powered by Blogger.