அதிகாரம் : அல் ஹுமஸா

அருளப்பட்ட இடம் :  மக்கா | வசனங்கள் : 10

பிரிவு : 1

  1. அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. புறங்கூறுபவனும் அவதூறு கூறுபவனுமாகிய ஒவ்வொருவனுக்கும் அழிவுதான்.
  3. அத்தகையவன் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அவ்வப்போது கணக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றான்.
  4. தன் செல்வம் தன் (பெயரி)னை நிலைத்திருக்கச் செய்யும் என்று அவன் நினைக்கின்றான்.
  5. ஒருபோதும் அவ்வாறன்று, மாறாக அவன் நிச்சியமாக தூள் தூளாக ஆக்கக்கூடிய  தண்டனையில் எரியப்படுவான்.
  6. தூள்துளாக ஆக்ககூடிய தண்டனையென்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
  7. அது அல்லாஹ்வால் எரியச்செய்யப்பட்ட நெருப்பாகும்.
  8. அது உள்ளங்களில் பாய்ந்து செல்லும்.
  9. அது அவர்களை சுற்றி அடைக்கப்பட்டிருக்கும்.
  10. நீளமான தூண்களில் (அவர்கள்) பிணைக்கப்பட்டிருப்பர். ரு1
Powered by Blogger.