அதிகாரம் : அல் ஆதியாத்

அருளப்பட்ட இடம் :  மக்கா | வசனங்கள் : 12

பிரிவு : 1
  1. அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. மூச்சுத்திணர போர்க்குதிரைகளை ஒட்டிச்செல்லும் கூட்டத்தை நான் சான்றாக காட்டுகின்றேன்.
  3. தீப்பொறிகளை வெளிப்படுத்துகின்ற குதிரை வீரர்களையும்.
  4. பின்னர் விடியற்காலையில் (எதிரிகள்) பாய்ந்து செல்பவர்களையும்.
  5. அதன் மூலம் புழுதி மேகங்களைக் கிளப்புபவர்களையும்.
  6. அதன் மூலம் (எதிரிகளின்) படைகளுக்கு நடுவில் ஊடுருவிச் செல்பவர்களையும் சான்றாகாக் காட்டுகிறேன்.
  7. நிச்சியமாக மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாக இருக்கின்றான்.
  8. நிச்சியமாக அவன் (தனது) சொல், செயலால்) அதற்குச் சாட்சி பகற்கின்றன.
  9. நிச்சியமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் தீவிரப் பற்றுள்ளவனாக இருக்கின்றான்.
  10. கல்லறைகளிலுள்ளவர்கள் அறிவதில்லையா? (அவர்கள்) எழுப்பப்பட்டு
  11. நெஞ்சங்களிலுள்ளது பிரித்தெடுக்கப்படும்போது,
  12. நிச்சியமாக அவர்களின் இறைவன் அந்த நாளில் அவர்களைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருப்பான். ரு1
Powered by Blogger.