அதிகாரம் : அல் காரிஆ

அருளப்பட்ட இடம் :  மக்கா | வசனங்கள் : 12

பிரிவு : 1

  1. அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (உலகில்) பெருந்துன்பம் ஒன்று (வரவிருக்கிறது).
  3. அப்பெருந்துன்பமென்பது என்ன?
  4. மேலும் பெருந்துன்பமென்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
  5. அந்நாளில் மக்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களை போன்று ஆகிவிடுவார்கள்.
  6. மலைகள் அடித்துச் சிக்கெடுக்கப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
  7. பின்னர் எவரது (செயல்களின்) எடைகள் கனமானவையாக உள்ளனவோ.
  8. அவர் திருப்திகரமான வாழ்வைப் பெறுவார்.
  9. ஆனால் எவரது (செயல்களின்) எடைகள் குறைந்தவையாக உள்ளனவோ,
  10. நரகம் அவருக்குத் தாயாகி (அவரது தங்குமிடமாகி) விடும்.
  11. அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
  12. அது ஒரு சுடர்விட்டெரியும் நெருப்பாகும். ரு1
Powered by Blogger.