அதிகாரம் : அல் ஃபீல்

அருளப்பட்ட இடம் :  மக்கா | வசனங்கள் : 6

பிரிவு : 1

  1. அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணைக்காட்டுபவனாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்)
  2. உமது இறைவன் யானைப் படையினர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?1
  3. அவன் அவர்களின் திட்டத்தைத் தோல்வியடையச் செய்யவில்லையா?
  4. மேலும் அவன் அவர்கள் (பிணங்கள்) மேல் கூட்டம் கூட்டமாக பறவைகளை அனுப்பினான்.
  5. அவை (இறந்து அழுகிப்போன) அவர்(களின் இறைச்சி)களைக் களிமண் கற்களின்மேல் அடித்துக் கொண்ட(வாறு தின்ற)ன.
  6. இவ்வாறு அவன் அவர்களை, தின்றுவிட்ட வைக்கோல்களைப்போல் ஆக்கிவிட்டான். ரூ1
Powered by Blogger.