86- அத் தாரிக்


அதிகாரம்: அத்தாரிக்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 18
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. வானத்தையும், இரவில் வருபவரையும் சான்றாகக் காட்டுகிறேன்.
  3. இரவில் வருபவர் என்றால் என்னவென்று உம்மை அறியச் செய்தது எது?
  4. அது ஊடுறுவிச் செல்லும் ஒளியைக் கொண்ட நட்சத்திரமாகும்.
  5. தன்மீது பாதுகாவலர் நியமிக்கப்படாத எந்த உயிரும் இல்லை.
  6. தான் எதிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் என்பதை மனிதன் (ஆழ்ந்து சிந்தித்துப்) பார்க்க வேண்டும்.
  7. குதித்து வரும் திரவத்திலிருந்து அவன் படைக்கப்பட்டுள்ளான்.
  8. அது இடுப்புகளுக்கும், மார்பெலும்புகளுக்குமிடையிலிருந்து வெளியாகின்றது.
  9. நிச்சயமாக, (இறைவனாகிய) அவன், அவனை (வாழ்விற்கு)த் திரும்பச் செய்ய ஆற்றல் பெற்றவனாவான்.
  10. அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
  11. பின்னர் அவனுக்கு எந்த வலிமையும் இருக்காது; மேலும் உதவி செய்பவர் எவரும் இருக்க மாட்டார்.
  12. மீண்டும், மீண்டும் மழையைக் கொட்டுகின்ற மேகத்தைச் சான்றாகக் காட்டுகிறேன்.
  13. (புற்பூண்டுகள் முளைக்க) வெடித்து விடுகின்ற பூமியையும் சான்றாகக் காட்டுகிறேன்.
  14. நிச்சயமாக(க் குர்ஆனாகிய) இது முடிவான வசனமாகும்1.
  15. நிச்சயமாக இது (பயனற்ற) வீண் பேச்சு அல்ல.
  16. நிச்சயமாக அவர்கள் ஒரு (சதித்)திட்டம் தீட்டுகின்றனர்;
  17. நானும் ஒரு திட்டம் தீட்டுகிறேன்.
  18. எனவே நீர் நிராகரிப்பவர்களுக்குக் காலக்கெடு அளிப்பீராக2; ஆம்; சிறிது காலம், அவர்களுக்குக் காலக்கெடு அளிப்பீராக. ரு1
Powered by Blogger.