அதிகாரம்: அல் அஃலா
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 20
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- மிக்க மேன்மைக்குரிய உமது இறைவனுடைய பெயரின் தூய்மையினை எடுத்துரைப்பீராக;
- அவனே (மனிதனைப்) படைத்து, முழுமைப்படுத்தினான்1;
- மேலும் அவன் (அவனுடைய ஆற்றல்களைக்) கணித்து, (அவற்றிற்கேற்ப அவனுக்கு) நேர்வழி காட்டுகின்றான்;
- அவன் மேய்ச்சல் புல்லை வெளிப்படுத்துகின்றான்;
- பின்னர் அவன் அதனைக் காய்ந்த, பயனற்ற குப்பையாக ஆக்குகின்றான்.
- நாம் உமக்கு(க் குர்ஆனை) க் கற்பிப்போம்; நீர் (அதனை) மறக்க மாட்டீர்2,
- அல்லாஹ் விரும்புகின்றவை நீங்கலாக3. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும், மறைந்திருப்பதையும் அறிகின்றான்.
- இலகுவானதை(யெல்லாம்) நாம் உமக்கு எளிதாக்கித் தந்திருக்கின்றோம்4.
- எனவே நீர் நினைவூட்டிக் கொண்டேயிருப்பீராக5. நினைவூட்டிக் கொண்டிருப்பது நிச்சயமாகப் பயனளிக்கக் கூடியதாகும்.
- இறைவனுக்கு அஞ்சுபவர் நிச்சயமாக அறிவுரையை ஏற்றுக் கொள்வார்.
- ஆனால் பெரும் பேறிழந்தவன் இதிலிருந்து விலகிக் கொள்வான்6.
- அவனே பெரும் நெருப்பில் நுழைபவனாவான்7.
- பின்னர் அவன் அதில் சாகவுமாட்டான்; வாழவுமாட்டான்8.
- தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்பவன் நிச்சயமாக வெற்றி பெறுகின்றான்.
- மேலும் அவன் தனது இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து, தொழுகைகளை நிறைவேற்றியும் வருகின்றான்.
- ஆனால் நீங்கள் (மறுமையை விட) இவ்வுலக வாழ்க்கைக்கே முதன்மை கொடுக்கின்றீர்கள்;
- அதே வேளையில் மறுமையோ மிகச்சிறந்ததும், என்றும் நிலையானதுமாகும்.
- நிச்சயமாக இதுவே முன்னுள்ள வேத நூல்களில் (போதிக்கப்பட்டு) உள்ளது.
- (அதாவது) இப்ராஹீம், மூஸா ஆகியவர்களின் வேத நூல்களில்9 (போதிக்கப்பட்டுள்ளது).