90- அல் பலத்


அதிகாரம்: அல்பலத்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 21
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (நீங்கள் கூறுவது போல்) இல்லை; நான் இந்த (மக்கா) நகரத்தைச் சான்றாகக் காட்டுகிறேன்.
  3. (முஹம்மதே!) நீர் இந்த நகரத்திற்கு (மீண்டும்) வருவீர்.
  4. தந்தையையும், மகனையும் சான்றாகக் காட்டுகிறேன்1.
  5. நிச்சயமாக, நாம் மனிதனைக் கடின உழைப்பாளியாகப் படைத்துள்ளோம்2.
  6. தனக்கு மேல் எவனுக்கும் ஆற்றல் இல்லை என அவன் நினைக்கின்றானா?3
  7. நான் (ஊதாரித்தனமாகச் செலவு செய்து) ஏராளமான பணத்தை அழித்து விட்டேன் என்று அவன் கூறுகின்றான்4.
  8. தன்னை எவனும் பார்க்கவில்லையென்று அவன் நினைக்கின்றானா?5
  9. நாம் அவனுக்கு இரண்டு கண்களைக் கொடுக்கவில்லையா?6
  10. ஒரு நாவையும், இரண்டு உதடுகளையும்7 (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா?).
  11. நாம் அவனுக்கு (நேர்வழி, வழிகேடு ஆகிய) இரண்டு இலக்குகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளோம்8.
  12. ஆனால் அவன் சிகரத்தை அடைய முயலவில்லை9.
  13. சிகரத்தை அடைதல் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது யாது?
  14. (அது) அடிமையை விடுதலை செய்வதாகும்;
  15. அல்லது பசியுடைய நாளில் உணவளிப்பதாகும்;
  16. நெருங்கிய உறவினராகிய ஓர் அனாதைக்கு10,
  17. அல்லது மண்ணில் வீழ்ந்து கிடக்கும் ஏழைக்கு11 (உணவளிப்பதாகும்).
  18. பின்னர் அவன், நம்பிக்கை கொள்பவர்களையும், விடாமுயற்சியுடன் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுபவர்களையும், ஒருவருக்கொருவர் கருணை புரியுமாறு அறிவுரை கூறுபவர்களையும் சேர்ந்தவனாகி விடுவதுமாகும்12.
  19. இத்தகையவர்களே அருளுக்குரியவர்களாவர்.
  20. ஆனால், எம்முடைய வசனங்களை நிராகரிப்பவர்கள், பேறிழந்தவர்களேயாவர்.
  21. அவர்களை நெருப்பு மூடிக் கொள்ளும். ரு1
Powered by Blogger.