அதிகாரம்: அல் லைல்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 22
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன்1.
- அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன்2.
- ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்3.
- நிச்சயமாக உங்கள் முயற்சிகள் வெவ்வேறானவையாகும்4.
- எனவே, எவர் (இறை வழியில்) கொடுத்து (செலவு செய்து), இறையச்சத்தை மேற்கொண்டு,
- உண்மையை நிரூபிக்கின்றாரோ,
- நிச்சயமாக, நாம் அவருக்கு வசதியை வழங்குவோம்.
- ஆனால் எவன் கருமித்தனம் செய்து, அலட்சியம் செய்து,
- உண்மையைப் பொய்ப்படுத்துவானோ;
- நிச்சயமாக, நாம் அவனுக்குத் துன்பத்தை நோக்கிச் செல்லும் பாதையை எளிதாக்குவோம்.
- அவன் அழிவிற்குள்ளாகும் போது, அவனது செல்வம் அவனுக்கு எந்தப் பயனும் அளிக்காது.
- நிச்சயமாக, (நேர்) வழி காட்டுவது எமது பொறுப்பாகும்.
- மேலும், மறுமையும், இம்மையும் எமக்குரியவையேயாகும்.
- எனவே, சுடர் விட்டெரியும் நெருப்பைப் பற்றி உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்.
- மிகப் பேறிழந்தவனைத் தவிர வேறெவனும் அதில் நுழைய மாட்டான்.
- (மேலும் உண்மையைப்) பொய்ப்படுத்தி, புறக்கணிக்கின்றவனும் (அதில் நுழைய மாட்டான்.)
- மேலும் மிகுந்த இறையச்சமுடையவர் அதிலிருந்து தொலைவிலேயே வைக்கப்படுவார்.
- அவரோ தாம் தூய்மையடைய தமது செல்வத்தை (இறை வழியில்) வழங்குவார்.
- மேலும் எவருக்கும் திருப்பிச் செய்ய வேண்டிய உபகாரம் எதுவும் அவருக்கு இராது.
- மாறாக, (அவர் தமது செல்வத்தை) மிக்க மேன்மைக்குரிய தமது இறைவனின் திருப்தியைத் தேடவே (வழங்குகின்றார்).
- விரைவில் (அவரைப் பற்றி) அவன் திருப்தியடைவான். ரு1