93- அல் ளுஹா


அதிகாரம்: அல் ளுஹா
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 12
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. முற்பகல் ஒளியை நான் சான்றாகக் காட்டுகிறேன்1.
  3. இரவை, அது பரவுகின்ற போது நான் சான்றாகக் காட்டுகிறேன்2.
  4. உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மைக் பற்றி) வெறுப்படையவுமில்லை3.
  5. முற்பகுதியை விடப் பிற்பகுதி (யின் ஒவ்வொரு காலகட்டமும்) உமக்கு மிகச்சிறந்ததாகும்4.
  6. உம் இறைவன் விரைவில் உமக்கு (எல்லாம்) வழங்குவான்; மேலும் (அதனால்) நீர் மிகவும் மகிழ்ச்சியடைவீர்5.
  7. அவன் உம்மை அனாதையாகக் கண்டு (தன் நிழலில் உமக்குப்) புகலிடம் அளிக்கவில்லையா?
  8. அவன் உம்மை (உம் சமுதாயத்திடம் கொண்ட அன்பினால் தம்மையே) இழந்தவராகக் கண்டான். எனவே அவன் (உமக்கு அவர்களைத் திருத்தும்) வழியைக் காட்டினான்6.
  9. அவன் உம்மைப் பெரும் குடும்பத்தையுடையவராகக் கண்டு, செல்வம் நிறைந்தவராக ஆக்கினான்.
  10. எனவே, அனாதையை நசுக்கி விடாதிருப்பீராக7.
  11. மேலும் உமது உதவியைக் கோருபவரை நீர் கடிந்து கொள்ளாதிருப்பீராக.
  12. மேலும் உமது இறைவனது பேரருளைப் பறை சாற்றுவீராக8. ரு1
Powered by Blogger.