95- அத்தீன்


அதிகாரம்: அத்தீன்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 9
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. அத்திமரம்1, ஆலிவ் மரம்2 ஆகியவற்றை நான் சான்றாகக் காட்டுகிறேன்.
  3. ஸீனாய் மலையையும்3 (சான்றாகக் காட்டுகிறேன்).
  4. இந்த அமைதியான நகரத்தையும்4 (சான்றாகக் காட்டுகிறேன்).
  5. நிச்சயமாக நாம் மனிதனைச் சிறந்த முறையில் படைத்து (எழுப்பியு)ள்ளோம்.
  6. பின்னர் நாம் அவனைத் தாழ்ந்தவர்களுள் மிகத் தாழ்ந்தவனாக மாற்றினோம்.
  7. ஆனால் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களைத் தவிர. எனவே இவர்களுக்கு என்றும் முடிவடையாத தூய வெகுமதி உண்டு.
  8. எனவே இத்தீர்ப்புக்குப் பின்னர் உம்மைப்  பொய்ப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது?
  9. அல்லாஹ் தீர்ப்பு வழங்குவோருள் மிகச்சிறந்த தீர்ப்பு வழங்குபவன் இல்லையா? ரு1
Powered by Blogger.