99- அஸ் ஸில்ஸால்


அதிகாரம்: அஸ் ஸில்ஸால்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 9
பிரிவுகள்: 1

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. பூமி அதன் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கப்படும் போது1,
  3. பூமி தன் சுமைகளை வெளியே எறியும்2.
  4. இதற்கு என்ன நேர்ந்தது என்று மனிதன் கேட்பான்3.
  5. அந்நாளில் அது தன் (மறைவான) செய்திகளை விளக்கும் 4.
  6. ஏனென்றால், உம்முடைய இறைவன் அதற்கு அவ்வாறு கட்டளையிட்டுள்ளான்.
  7. அந்நாளில் மக்கள் தங்கள் செயல்களின் விளைவுகளைக் காணும் பொருட்டு, சிதறடிக்கப்பட்ட கூட்டங்களாக வந்து சேருவார்கள்6.
  8. பின்னர் ஓர் அணு அளவு (ஆவது) நன்மை செய்திருப்பவர் அதனைக் கண்டு கொள்வார்7.
  9. மேலும் ஓர் அணு அளவு (ஆவது) தீமை செய்திருப்பவரும் அதனைக் கண்டு கொள்வார்8. ரு1
Powered by Blogger.