அதிகாரம்: அஸ் ஸில்ஸால்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 9
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- பூமி அதன் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கப்படும் போது1,
- பூமி தன் சுமைகளை வெளியே எறியும்2.
- இதற்கு என்ன நேர்ந்தது என்று மனிதன் கேட்பான்3.
- அந்நாளில் அது தன் (மறைவான) செய்திகளை விளக்கும் 4.
- ஏனென்றால், உம்முடைய இறைவன் அதற்கு அவ்வாறு கட்டளையிட்டுள்ளான்.
- அந்நாளில் மக்கள் தங்கள் செயல்களின் விளைவுகளைக் காணும் பொருட்டு, சிதறடிக்கப்பட்ட கூட்டங்களாக வந்து சேருவார்கள்6.
- பின்னர் ஓர் அணு அளவு (ஆவது) நன்மை செய்திருப்பவர் அதனைக் கண்டு கொள்வார்7.
- மேலும் ஓர் அணு அளவு (ஆவது) தீமை செய்திருப்பவரும் அதனைக் கண்டு கொள்வார்8. ரு1