அதிகாரம்: அல் கத்ர்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 6
பிரிவுகள்: 1
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நிச்சயமாக நாம் இ(ந்)த(க்குர்ஆ)னை தீர்ப்பிற்குரிய இரவில் இறக்கினோம்1.
- தீர்ப்பிற்குரிய இரவு என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
- தீர்ப்பிற்குரிய இரவு, ஆயிரம் மாதங்களை விட மிகச்சிறந்ததாகும்2.
- அதில் வானவர்களும், அந்த ஆன்மாவும் (ஆத்மீகமும், பௌதீகமுமான) அனைத்து விவகாரங்கள் தொடர்பாகத் தங்கள் இறைவனின் கட்டளையுடன் இறங்குகின்றனர்.
- விடியற்காலை தோன்றும் வரை. (அது முற்றிலும்) சாந்தியானதாகவே இருக்கும்3. ரு1